Tuesday, April 1, 2014

Iyappan - ஸ்வாமியுன் சரணம்

ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்
பாடலைக் கேட்டுஎன் முன்னே வரணும்  
ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்
பாவிஎ னக்குந்தன் அருளைத் தரணும் 

வன்புலி ஏறி வந்திடுவாயே
உன்தரிசனம் நீ தந்திடுவாயே (2)

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

பொன்னில் ஆசை கொண்டுழன் றிருக்கும்
என்னை நாடிய என்னுயிர் ஐயப்பா
உன்னை நாடியே உய்ந்திடவே நான்
உன்னடி நிழலில் என்னைநீ வையப்பா

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

காணும் கண்ணை கருத்தை யள்ளும்
கூடிய வினைப்பயன் களைந்தே காக்கும் 
பூணும் கோலத்தை பார்த்திட வேஎனை
பதினெட்டு படியே ற்றிடுவாய் ஐயப்பா

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

செம்பொன் மேனிச் செழுஞ்சுடரே என்
துன்பங்கள் நீங்க வரமருள் ஸ்வாமி
நம்பியே வந்தேன் நானும் உனையே
நிலைமை தெரிந்து காத்திடு எனையே

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

நெஞ்சகக் கோவிலிலில் உனை வைத்தேனே  
நித்தமும் உன்னடி நான் பூசித்தேன்
தஞ்சம் என்றுன்னடி பணிந்தே நான்
தலைவிதி மாற்ற உனையா சித்தேன்

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)



No comments:

Post a Comment