Thursday, April 17, 2014

Parvati - ஆதார ஸ்ருதி

பல்லவி

ஆதார ஸ்ருதியிங்கு நீயே என்னை
அன்புடன் ஆதரிப்பாயே
நீதானே கதியென்று வந்தேன் – நங்கை
நல்லூரை ஆளுமென் தாயே

(ஆதார ஸ்ருதியிங்கு)

சரணம் 1

நாதத்தின் வடிவென்று சொல்ல – உன்னை
வேதத்தின்  முடிவென்றுஞ் சொல்ல
ஞானமோ எனக்கொன்று மில்லை – உன்
நாமந்தான் என்தவத்தின் எல்லை

(ஆதார ஸ்ருதியிங்கு)

சரணம் 2

கொண்டதே கோலமென்றிருக்கும் – இந்தக்
கடையவன் வாழ்வென்று சிறக்கும்
பண்டிதர் வழியொன்று மறியேன் – தமிழ்ப்
பாட்டன்றி வேறொன்று மறியேன்

(ஆதார ஸ்ருதியிங்கு)


No comments:

Post a Comment