பல்லவி
ஆதார ஸ்ருதியிங்கு நீயே – என்னை
அன்புடன் ஆதரிப்பாயே
நீதானே கதியென்று வந்தேன் – நங்கை
நல்லூரை ஆளுமென் தாயே
(ஆதார ஸ்ருதியிங்கு)
சரணம் 1
நாதத்தின் வடிவென்று சொல்ல – உன்னை
வேதத்தின் முடிவென்றுஞ் சொல்ல
ஞானமோ எனக்கொன்று மில்லை – உன்
நாமந்தான் என்தவத்தின் எல்லை
(ஆதார ஸ்ருதியிங்கு)
சரணம் 2
கொண்டதே கோலமென்றிருக்கும் – இந்தக்
கடையவன் வாழ்வென்று சிறக்கும்
பண்டிதர் வழியொன்று மறியேன் – தமிழ்ப்
பாட்டன்றி வேறொன்று மறியேன்
(ஆதார ஸ்ருதியிங்கு)
No comments:
Post a Comment