Thursday, April 24, 2014

Vishnu - அரங்கன் அழைத்திட்டால்

அரங்கன் அழைத்திட்டால் இனியொரு வினையில்லை
அவனருள் கிடைத்திட்டால் கவலைகள் இனியில்லை
திருவருள் இருந்தால்தான் தரிசனம் சித்திக்கும்
தரிசனம் கிடைத்தாலே நம்வாழ்க்கைத் தித்திக்கும்

ஸ்ரீரங்கம் என்றாலே  நம்மனம் துள்ளிடுமே
ஸ்ரீரங்கன் லாவண்யம் இதயம் அள்ளிடுமே
ஸ்ரீபாதம் தமைபிடித்த ஸ்ரீமதியைப் பார்த்து
சற்றே எழுந்திருக்க நம்மனம் சொல்லிடுமே

(அரங்கன் அழைத்திட்டால் )

தெய்வீக அழகினிலே நம்மனம் லயித்திடுமே
லௌகீக விஷயார்த்தம் ஒருபுறம் வைத்திடுமே
பைந்நாக பாய்விரித்து பரமனையே சுமந்திருக்கும்
பாம்பணைக் கண்டு பொறாமைத் துளிர்த்திடுமே

(அரங்கன் அழைத்திட்டால் )

No comments:

Post a Comment