மாசு படர்ந்த மனதுடன் கோவில்
வாசலில் எப்படி வருவேன்
ஈசனே எந்தன் பரமேஸ் வரனே
எனக்கொரு வழிநீ தருவாய்
மண்ணில் தூய மனதுடன் தானே
என்னை நீயும் படைத்தாய்
எண்ணங் களையே காம மென்னும்
அழுக்கால் நானும் கெடுத்தேன்
பண்டு தொட்டு படர்ந்த மாசை
பரமனே எப்படி துடைப்பேன்?
இன்தமிழ் தந்த உந்தன் பெயரை
என்தமிழ் என்று பாடிடுமோ?
நன்மை பயக்கும் நாதனுன் பதங்கள்
நெஞ்சம் என்று நாடிடுமோ?
என்னுயிர் பிரியும் பொழுதி லாவது
இத்தவம் எனக்கு கூடிடுமோ?
கோவில் நீகொண்ட இடங்களில் எந்தன்
கால்கள் அழைத்துச் சென்றதில்லை
தேவனுன் சன்னதி ஆணவம் ஒழிந்து
தலையும் தாழ்ந்து நின்றதில்லை
காவலனே நீ கைவிட்டா யெனில்
கதியோ எனக்கு என்றுமில்லை
No comments:
Post a Comment