ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே நீ வருவாய் நான்
ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே நீ வருவாய்
ஆதியே நானுந்தன் அடைக்கல மானேன் (3)
ஏதுமே செய்தெனை அய்யனே காப்பாய் (2)
ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே நீ வருவாய்
கண்களு முன்னுரு கண்டிட வேண்டும்(2)
கைகளு முன்னடி தொழுதிட வேண்டும் (2)
பண்தமிழ் பாடல்கள் பாடிட வேண்டும் (2)
பாதநிழல் மனம் நாடிட வேண்டும் (2)
ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே நீ வருவாய் (4)
(கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் மெட்டு)
No comments:
Post a Comment