Tuesday, April 1, 2014

Vishnu - கடன் தீர்க்கும் கருணை

வானவர் வேண்டுதல் வெற்றியில் முடிய
தூண்பிளந்து தோன்றிய தெய்வமே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

இலக்குமியை  இடப்பாகம் இருத்தினாய் போற்றி
மலரடி பணிந்தார்க்கு வரமருள்வாய் போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

அரக்கன் குடல்கிழித்து  அன்பரைக் காக்க
கரங்களில் ஆயுதம் கொண்டவனே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

அனைத்து விடங்களும் அழித்து பவவினை
நினைத்ததும் அறுக்கும் நாரணனே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

சிங்க நாதத்தால் எண்திசை காவல்திக்க
ஜங்களின் பயம்போக்கி காத்திடுவோய் போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

பிரகலாதனை காக்க இரணியனை வதைத்த
திருமகளின் தெய்வமே திருமாலே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

கிரகங்களின் பிடியிலே கலங்கிடும் பக்தர்களை
அரவணைத்து பயம்நீக்கும் அன்னையே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி 

பிரமனும் ருத்திரனும் புகழ்ந்து பணிந்திடும்
மறைகளின் முடிவான சத்தியமே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

கடன்தீர இப்பாட்டை கவனமுடன் படிப்போரின்
கடந்தீர்ந்து செல்வம் குவிந்திடவே அருள்வாயே 
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி 

No comments:

Post a Comment