Thursday, March 6, 2014

Baba - சீரடியின் நாதன் பெயர்

சீரடியின் நாதன் பெயர் தினம் உரைப்போமே - இங்கு
சேர்ந்திருக்கும் வினைப்பளுவை நாம் குறைப்போமே

(சீரடியின்)


பாசமழை பொழிவதி லவன் மன்னவ னன்றோ -நமக்குப்
பதினொன்று கட்டளைகள் தந்தவ னன்றோ
ஈசன் ஹரி பிரம்ம னிவன் உருவமல்லவா - இந்த
இறைவன் நமது என்ப திலொரு கருவமல்லவா

(சீரடியின்)

எண்ணையின்றி விளக்கெரித்தது அதுவும் மாயமே - அவன்
என்னை இங்கு மாற்றியது அதுவும் நேயமே
கண்ணிரண்டில் கருணை காட்டும் தாயுமானவன் - அவன்
கலியுகத்து வரதன் சாயி ராம னானவன்

(சீரடியின்)

No comments:

Post a Comment