சீரடியின் மரங்களிலும் சாயி இருக்கிறான்
சிறகடிக்கும் பறவையிலும் சாயி இருக்கிறான்
தேடிவரும் அன்பர்களின் நெஞ்சில் இருக்கிறான்
சரணடைந்தாய் என்னைநீ அஞ்சேல் என்கிறான்
சாயியிடம் வந்தபின்னர் என்ன கலக்கம் - அவன்
திருவடிகள் பற்றியபின் இல்லை வருத்தம்
தேய்பிறையாம் வாழ்வுகூட வளர்பிறை யாகும் - இந்தச்
சீரடியில் வந்துவிட்டால் ஒருமுறையேனும்
நித்தமுமே விளக்கேற்றி அவனை நினைப்போம் - அவன்
நாமத்தினால் நம்முடைய இதயம் நிறைப்போம்
சத்தியமாய் சொல்லுகிறேன் இதனைக் கேளுங்கள் - என்
சாயியிடம் சரணடைந்து விதியை ஆளுங்கள்
No comments:
Post a Comment