நங்கை நல்லூர் உறையும் ஜெய மாருதி - இங்கு
நீ தானே என்னுடைய சரணாகதி
சங்கடங்கள் தீர்த்திடுவாய் ஜெய மாருதி - என்றும்
என்னுடைய வானத்தில் நீயே மதி
(பல்லவி)
சரணம் 1
அம்பரத்தைத் தொட்டுவிடும் உயரத்தில் - நீ
இருப்பதினால் மறந்தனையோ ஜெய மாருதி
துன்ப நிலை ஒழிந்திடுமா ஜெய மாருதி - இங்கு
செல்வ மழை பொழிந்திடுமா ஜெய மாருதி
சரணம் 2
விடையில்லாக் கேள்வி ஆச்சு ஜெய மாருதி - என்
வாழ்க்கையொரு வேள்வி ஆச்சு
வடைமாலை சாற்ற வந்தேன் ஜெய மாருதி - நல்ல
வழி நீயும் காட்டிடுவாய் ஜெய மாருதி
(பல்லவி)
No comments:
Post a Comment