சீரடியாம் தலமிருக்கு
சென்றுவர நலமிருக்கு
பாபாவின் பெயரிருக்க
புத்தியிலே
பயமெதற்கு (2)
பதினொரு
விதியிருக்கு
பாசமுள்ள
மொழியிருக்கு
கதியில்லாத்
தீனருக்கு
கருணையுள்ள
விழியிருக்கு (2)
துவாரிகா
மாயிதனில்
தெய்வமொன்று
குடியிருக்கு
வாசலிலே
வருபவருக்கு
வரங்கள் தரவே
காத்திருக்கு
தேவன்தாள்
பணிந்தவருக்குத்
துன்பமில்லைத்
துயரமில்லை
நாதனவன் நமக்கு
அன்னை
நாமெல்லாம்
அவன்தன் பிள்ளை
(சீரடியாம் தலமிருக்கு
)
அவனிருக்க பயம்
இல்லை
அன்பினுக்கு அவன்
எல்லை
கவலைக்கொரு இடம்
இல்லை
கண்டுகொள்வோம்
அவன் எல்லை
தேவன்தாள்
பணிந்தவருக்குத்
துன்பமில்லைத்
துயரமில்லை
நாதனவன் நமக்கு
அன்னை
நாமெல்லாம்
அவன்தன் பிள்ளை
(சீரடியாம் தலமிருக்கு
)
No comments:
Post a Comment