Thursday, March 27, 2014

Krishna - கண்ணன் குழலோசை


கண்ணன் குழலோசை தான்சுமந்திடும்
காற்றும் மிக நல்லதே
மன்னன் அவன் பாதம் முத்தாடிய
மண்ணும் மிக நல்லதே

(கண்ணன் குழலோசை)

யமுனை நதியோர மரம் தன்னிலே
மலர்கள் மிக பூக்குமே
யதுகிரியின் பாதம் நோகாமல் காக்கும்
அவையும் மிக நல்லதே
விமலன் பாதங்கள் ஸ்பரிசித்த நதியை
வானம் கொண்டாடு மே

(கண்ணன் குழலோசை)

மன்னவன் முடிசேர்ந்த மயிற் பீலியும்
மனதை பறி கொள்ளுமே
மார்பில் அசைந்தாடும் மணம்வீசும் துளசி
மாலை அது நல்லதே
சின்னஞ் சிறுகுழந்தை ரூபத்தைக் கண்ட
கண்கள் மிக நல்லதே

(கண்ணன் குழலோசை)

கீதையை தான்சொன்ன குரு பிறந்ததால்
கோகுலம் நல்லதே
ராதை உள்ளத்தில் குடிகொண்ட தாலவள்
பெயரும் மிக நல்லதே
நாதன் பெயர்நானும் கவிதன்னில் வைத்த
நாளும் மிக நல்லதே

(கண்ணன் குழலோசை)



No comments:

Post a Comment