Thursday, March 27, 2014

Baba - பாபா பாட்டு பாடிடுவோமே

வெய்யில் பட்ட பனியைப் போல
வினைகள் ஓடும் என்
அய்யன் பாதம் பணிந்த வருக்கு
அல்லல் தீரும்
யானிருக்கப் பயமேன் என்ற
அன்னை அல்லவா - அவன்
கலியுகத்து வரதன் என்பது
உண்மை அல்லவா

அவன் விழியில் கருணை கண்டேன்
அவன் சொல்லில் வேதம் கண்டேன்
அவன் தாளில் சொர்க்கம் கண்டேன்
அவனுருவில் சிவனைக் கண்டேன்

அவனிருக்கப் பிறவிக் கடலும்
ஓடை தானம்மா - ஒரு
தவமிருக்கத் தேவையில்லை
கவலை ஏனம்மா

(வெய்யில் பட்ட)

சீரடியைத் தேடி  நாமும்
சீக்கிரமாய்ப் போவோம் வாரும்
ஓரடி நாம் நெருங்கிச் சென்றால்
நூறடி அவன் வருவான் பாரும் 

பத்தின்கூட ஒன்று சொன்னான்
பக்தருக் காகத்தான் - அவன்
நித்தியமும் வாழ்ந்திருப்பான்

நம்மைக் காக்கத்தான்

No comments:

Post a Comment