மது வனம் தன்னில்
கண்ணன்
கோபியரைப்
பார்த்திருந்தான்
கோபியரும் கண்ணன்
குழல்
ஓசைதனைக்
கேட்டிருந்தார்
ராதையும் கோபம்
கொண்டாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
உடல் மனம்
கொதித்து நின்றாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
மது வனம் தன்னில்
கண்ணன்
கோபியரைப்
பார்த்திருந்தான்
மன வனம் தன்னில்
அவன்
ராதையினைச்
சேர்ந்திருந்தான்
ராதை ஏன் கோபம்
கொண்டாள்
ராதை ஏன் கோபம்
கொண்டாள்
கண்ணன் மனம்
அறியவில்லை
ராதை ஏன் கோபம்
கொண்டாள்
ராதை ஏன் கோபம்
கொண்டாள்
எத்தனைபேர்
வந்தாலும்
ராதையே ராணி
காதல்கடல்
கடக்க
அவள்தான் தோணி
கண்களை அங்கும்
இங்கும்
ஓட விட்டால் ஈன
மது
கண்ணன் மேல்
காதல் கொண்ட
ராதைக்கு அவ
மானமிது
கோபியர் வந்து
போவாரே
ராதைக்கு ஈடு
ஆவாரோ
கோபியர் வந்து
போவாரே
ராதைக்கு ஈடு
ஆவாரோ
கண்ணனின் கண்ணில்
காதல் மழைக்கும்
ராதையின் பெயரை
நெஞ்சம்
அழைக்கும்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
பொய்யினை
உண்மைபோல
பேசுமிந்தப்
பொய்யனிடம்
ராதையும் கோபம்
கொண்டாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
உடல் மனம்
கொதித்து நின்றாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
மனதினில்
ராதைமேல்
காதலெனக்
கூறுகிறான்
காதலைக்
சொல்லாதேன்
வேறுதிசை
ஓடுகிறான்
காதலை
வார்த்தைகளில் காதலர்கள் சொல்வதில்லை
ராதையவன்
விழிகளிலே காதலையேன் காணவில்லை
கண்களை எப்படிப்
படித்திடுவாள்
காணும் போதேயவள்
துடித்திடுவாள்
கண்களை எப்படிப்
படித்திடுவாள்
காணும் போதேயவள்
துடித்திடுவாள்
இதழ்
உலர்ந்திடும் முகம் சிவந்திடும்
இதயம் நூறு
தூளாய் வெடித்திடும்
ராதைதான்
கண்ணனுயிர் என்றுஅவள் அறிந்துகொண்டால்
கோபமினி வாராதடி வாராதடி வாராதடி
ராதையும் கோபம்
கொண்டாள்
ராதை ஏன் கோபம்
கொண்டாள்
ராதையும் கோபம்
கொண்டாள்
ராதை ஏன் கோபம்
கொண்டாள்
No comments:
Post a Comment