பல்லவி
இருள் விலகுமா ஞான ஒளி பிறக்குமா
அரங்கன்தன் திருக்கோவில் எனை அழைக்குமா
அனுபல்லவி
உருகாத நெஞ்சினையும் அனலிட்ட நெய்யாக
உருகவைக்கும் அவனழகை விழி பருகுமா
சரணம் 1
சிரசின் கீழ் கைகொடுத்த சிங்கார மாயவனை
அருகிருந்து நான் காணும் அருள் கிடைக்குமா
அரவிந்தன் பாதங்கள் அடியவனின் சிரம் பட்டு
அறியாத ஞானமெல்லாம் அறிவிக்கு மா
(பல்லவி )
சரணம் 2
ஒருநூறு பிறவி இன்னும் சம்மதம் தான் எனக்கு
அரங்கத்தில் ஜனமிக்கும் வரம் கிடைக்குமா
மறவாது உன் நாமம் மாலவனே உன் புகழை
அருந்தமிழில் நான் பாடும் திறம் கிடைக்குமா
(பல்லவி)
No comments:
Post a Comment