Sunday, March 30, 2014

Vishnu - இருள் விலகுமா
















பல்லவி

இருள் விலகுமா ஞான ஒளி பிறக்குமா
அரங்கன்தன் திருக்கோவில் எனை அழைக்குமா

அனுபல்லவி

உருகாத நெஞ்சினையும் அனலிட்ட நெய்யாக
உருகவைக்கும் அவனழகை விழி பருகுமா

சரணம் 1

சிரசின் கீழ் கைகொடுத்த சிங்கார மாயவனை
அருகிருந்து நான் காணும் அருள் கிடைக்குமா  
அரவிந்தன் பாதங்கள் அடியவனின் சிரம் பட்டு
அறியாத ஞானமெல்லாம் அறிவிக்கு மா

(பல்லவி )

சரணம் 2

ஒருநூறு பிறவி இன்னும் சம்மதம் தான் எனக்கு
அரங்கத்தில் ஜனமிக்கும் வரம் கிடைக்குமா
மறவாது உன் நாமம் மாலவனே உன் புகழை
அருந்தமிழில் நான் பாடும் திறம் கிடைக்குமா

(பல்லவி)



No comments:

Post a Comment