Wednesday, February 5, 2014

Vinayagar - ஆத்தங்கர கணபதி

ஆத்தங்கர மரங்கீழ
ஒய்யாரமா கோயில்கொண்ட
மூத்தவனே முருகனுக்கு
கணபதி எனக்கு
சாத்திரங்க சொல்றபடி
தெரியாது பூச பண்ண
ஆசையிலே ஓடி வந்தேன்
கணபதி

ராவெல்லாம் தூங்காத
ராசாவே ஒனக்காக
வீட்டசுத்தம் செஞ்சிவச்சேன்
கணபதி என்
ஆவலநீ தெரிஞ்சிகிட்டு
அன்பமட்டும் புரிஞ்சிகிட்டு
அழப்பயேத்து வரவேணும்
கணபதி

கொழுக்கட்ட செஞ்சுவச்சேன்
கூடபொரி அப்பம் வெச்சேன்
பழவகையும் பலவும் வச்சேன்
கணபதி நல்ல
மழவேண்டும் நெலம்போல
வளம்வேண்டி நாவந்தேன்
மனசார வாழ்த்திப் போடு
கணபதி

வருசமெல்லாம் மரத்துகீழ
வெய்யில்  மழ பார்காம
இருக்குறியே என்னய்யா
கணபதி நீ
ஒருவாரம் ஏழைவீட்டில்
ஓய்வெடுத்து இருந்துவிட்டு
அப்புறமா போக வேணும்

கணபதி

No comments:

Post a Comment