Monday, June 30, 2014

Baba - சீரடி கோவில் திருமணி ஓசை

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று பாடல் மெட்டில் அமைந்தது


சீரடி கோவில் திருமணி ஓசை
காதில் விழுந்தது இன்று - நெஞ்சே
இன்றைய நாளும் நன்று

யாமிருக் கையிலே பயமிலை என்ற
வாக்கும் ஒலித்தது இன்று - நெஞ்சே
மங்கள நாளும் இன்று

திக்கற்று நானின்று தவித்திட்ட வேளை
ஓமென்ற ஒலி கேட்டது
அவன்குரலை செவி கேட்டது

சாயியவன் எந்தையவன்
தாயுமவன் தந்தையவன்

என் வாழ்வில் ஒளியேற்றினான்
எப்பொழுதும் காப்பாற்றுவான்

(சீரடி கோவில் திருமணி ஓசை)

கனிவான பார்வைகள் நமக்காக உண்டு
சிரம்மீது கரங்கள் உண்டு
கரம்மீது வரங்கள் உண்டு

தீனருக்கு உதவிடவே
பூமிதனில் அவதரித்தான்

நம் வாழ்வில் ஒளியேற்றினான்
எப்பொழுதும் காப்பாற்றுவான்

(சீரடி கோவில் திருமணி ஓசை)

No comments:

Post a Comment