Tuesday, June 24, 2014

Baba - சீரடியாம் திருத்தலம்தான் உன்னிடமோ

சீரடியாம் திருத்தலம்தான் உன்னிடமோ அது
தேடி வரும் அடியவர்க்கு பாற்கடலோ
பாடலொன்று நானெழுதி வந்திடுவேன் அதை
பாதத்தில் வைத்துசிரம் வணங்கிடுவேன்

(சீரடியாம் திருத்தலம்தான் )

வெறுங்கையுடன் அடியவர்கள் வந்திடுவார் அவர்
மனதினிலே சாயி தீபம் ஏற்றிடுவார்
அருளாலே அவர்கரங்கள்  நிறைத்திடுவாய் நீ
அலர்போலே அவர்நெஞ்சைப் பறித்திடுவாய்

(சீரடியாம் திருத்தலம்தான் )

பரிவுடனே திருத்திவிட்டாய் என்வழிகள் உன்
பக்தியிலே நனைந்ததெந்தன் இருவிழிகள்
அறிவுடனே பொருள்தந்து வாழ்வுதந்தாய் - உன்
அடியிணையில் என்சிரமும் தாழ்ந்திடுமே

(சீரடியாம் திருத்தலம்தான் )

வேறுபாதை போகின்ற அன்பருக்கும் அவர்
வாழ்வினிலே தீபமேற்றி ஒளிதருவாய்
பாரினிலே உனைப்போலே குருவில்லை நாம்
வேண்டும்வரம் தரும்கற்பக தருவில்லை


(சீரடியாம் திருத்தலம்தான் )

No comments:

Post a Comment