Friday, June 27, 2014

Baba - சீரடிசெல்லும் பாதையிலே



சீரடிசெல்லும் பாதையிலே என் சிந்தையும் இருக்கிறது - அங்கு
ஆட்சி புரியும் அண்ணலைக் காண இதயமும் துடிக்கிறது

(சீரடிசெல்லும் பாதையிலே)

ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
மானுடம் வாழ மண்மேல் வந்த மன்னவன் நகரல்லவா – அவர்
வாழ வைக்கும் காவல் தெய்வம் அன்னைக்கு நிகரல்லவா

(சீரடிசெல்லும் பாதையிலே)

என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
என்னுடன் நிஜத்தில் இருப்பது போலே  நானும் நினைக்கின்றேன்
என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
என்னுடன் நிஜத்தில் இருப்பது போலே  நானும் நினைக்கின்றேன்
சின்னவன் செய்த தவறுகள் பொறுத்து காத்திடவே வேண்டும் தினம்
நானும் உன்மேல் செந்தமிழ் பாடல் யாத்திடவே வேண்டும்

(சீரடிசெல்லும் பாதையிலே)

ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலின் மெட்டில் அமைந்தது.

No comments:

Post a Comment