சீரடி என்னும் ஊரினிலே நம்
சாயி பாபா இருக்கிறார்
தேடிவரும் தன் பக்தருக்கெல்லாம்
வரங்கள் தந்து மகிழ்கிறார்
வரங்கள் தந்து மகிழ்கிறார்
கதி இல்லாமல் வந்திடும் பேருக்கு
கட்டளை அவரும் தருகிறார்
கைவிரல் பிடித்து மையிருள் தன்னில்
கைவிரல் பிடித்து மையிருள் தன்னில்
கூடவே அவரும் வந்திடுவார்
கூடவே அவரும் வந்திடுவார்
(சீரடி என்னும் ஊரினிலே நம் )
மறைகளை ஓதி பூஜைகள் செய்யும்
முறைகளுக் கவசியம் இல்லையே
இறைவனின் நாமம் ஒருமுறை சொல்ல
இறைவனின் நாமம் ஒருமுறை சொல்ல
அகலும் நமது தொல்லையே
அகலும் நமது தொல்லையே
வாட்டிடும் வறுமை விலகிட வேண்டி
தொழுவோம் நாமும் அவனடி
கேட்ட வரங்கள் கிடைத்திடும் நிச்சயம்
கேட்ட வரங்கள் கிடைத்திடும் நிச்சயம்
அதுதான் பாபா சன்னதி
அதுதான் சீரடி சன்னதி
(சீரடி என்னும் ஊரினிலே நம் )
No comments:
Post a Comment