Tuesday, June 24, 2014

Baba - சீரடியை நானும் நாடி வந்தேன்

(இனியவளே என்று பாடி வந்தேன் பாடல் மெட்டு)

சீரடியை நானும் நாடி வந்தேன்
சீரடிதான் என்று ஆகி நின்றேன்
தேடி வரும் அடியவரின் துயரம் தீர்ப்பவன்
நாடிடுவோர் இல்லங்களில் வளமை சேர்ப்பவன்

சீரடியை நானும் நாடி வந்தேன்
சீரடிதான் என்று ஆகி நின்றேன்
மன்னுயிரை தன்னுயிராய் என்றும் நினைப்பவன்
அன்னையென கரம்விரித்து நம்மை அணைப்பவன்

(சீரடியை நானும் நாடி வந்தேன்)

ஓராயிரம் பேரில் அவன் எனக்கே குருவானான்
பாடாத என் நாவில் வந்து பாட்டின் கருவானான்
அவன் பெயரில் நான் பாடும் பாட்டு என்றும் நன்மையே
அவனின்றி நானில்லை என்பதொன்றே உண்மையே

அவனால் தமிழ் அறிந்தேன்
அவனில் என்னை மறந்தேன் (2)

நெஞ்சீர்த்த்திடும் ஓர் பார்வையால்
என்னை வென்றவன் வென்றவன் வென்றவன்

(சீரடியை நானும் நாடி வந்தேன்)

பிடிவாதமா யிருந்த என்னை அவனும் கண்டானே
கடிவாளமும் போட்டு என்னை தன்னுள் கொண்டானே
அவன்தந்த இவ்வுயிரும் என்றும் அவனின் சொந்தமே
அவனின்றி எனக்கிந்த உலகில் இல்லை பந்தமே

அவனால் துயர் களைந்தேன்
அதனால் சுகம் அடைந்தேன் (2)

அவன் பாதங்கள் என் பாதையில்
என்றும் தோன்றுமே தோன்றுமே தோன்றுமே  VRI


No comments:

Post a Comment