Thursday, July 3, 2014

Ramanuja - உடையவரை நானும் நாடி வந்தேன்

உடையவரை நானும் நாடி வந்தேன்
உடையவர்தான் என்று ஆகி நின்றேன்
பெரும்புத்தூர் தலத்தினுக்கு பெருமை சேர்த்தவன்
பாஷியத்தால் உலகினரை தன்பால் ஈர்த்தவன்

உடையவரை நானும் நாடி வந்தேன்
உடையவர்தான் என்று ஆகி நின்றேன்
வைணவமாம் மரத்தினுக்கு தண்ணீர் ஊற்றினான்
வைகுண்டம் செல்வதற்கு வழியைக் காட்டினான்

(உடையவரை நானும் நாடி வந்தேன் )

வேதாகமம் பாடும் அந்த நாரணன் பாயானான்
பாத மலர்பணிந்த எனக்கு அவனே தாயானான்
என் நெஞ்சில் நான் அவனை எண்ணி உருகா நாளில்லை
கண்களிலே அவன் உருவை வைத்து பார்க்கா பொழுதில்லை

கண்ணீர் அவன் துடைத்தான்
கவிதை அவன் கொடுத்தான் (2)

அவன் பாதத்தில் என் பாடல்கள்
என்றும் அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணம்

(உடையவரை நானும் நாடி வந்தேன்)

மதில் மேல் ஒரு பூனை போல நானும் வாழ்ந்தேனே
முடியாத தோர் உலக சுகத்தில்  நானும் ஆழ்ந்தேனே

அவனாக எனைத்தேடி வந்து என்னை ஆண்டவன்
அவனின்றி குருவில்லை நானும் உறுதி பூண்டவன்

வழியை அவன் கொடுத்தான்
ஒளியும் அவன் கொடுத்தான் (2)

அவன் காட்டிய நல் பாதையில்
நானும் செல்லுவேன் செல்லுவேன் செல்லுவேன்

(உடையவரை நானும் நாடி வந்தேன்)

No comments:

Post a Comment