கோகுலத்தின் உயிர்நாடி கண்ணன் நீயடா - உந்தன்
கழுத்தில் உள்ள கௌஸ்துபமோ கன்னி நானடா
(கோகுலத்தின் உயிர்நாடி ...)
வேணுகானம் கேட்டு அங்கு பறவைகள் பாடும் அந்த
நாதத்தினைக் கேட்டு யமுனை நதியுமே ஓடும்
நானும் அந்த கானத்திலே என்னை மறந்தேன் உன்
நறுமணக்கும் திருமேனி நினைவில் அமிழ்ந்தேன்
(கோகுலத்தின் உயிர்நாடி ...)
பசுக்கள்மீது உள்ள கருணை பாவைக் கில்லையா - எனைப்
பாசமுடன் அணைப்பதுமே உனக்குத் தொல்லையா
வசிக்க ஒரு இடமும் உந்தன் நெஞ்சில் தந்திடு - என்
யௌவனமும் உனக்குத் தந்தேன் கொள்ள வந்திடு
(கோகுலத்தின் உயிர்நாடி ...)
No comments:
Post a Comment