முழுமுதலைக் காண வந்தேன்
முதன் முதலாய் காண வந்தேன்
கொழுக்கட்டை உண்ணும் செல்ல
கணபதியைக் காண வந்தேன்
(முழுமுதலைக் காண வந்தேன்)
கந்தனுக்கு மூத்தவனாம்
குவலயத்தைக் காப்பவனாம்
வந்தவரின் குறையறிந்து
வரங்களினால் தீர்ப்பவனாம்
கண்ணதாசனின் கருத்தைக் கவர்ந்திட்ட
காவல் தெய்வமே கற்பகமே
கண்ணை கவர்கின்ற பிள்ளை யார்பட்டி
கோவில் கொண்டவென் கணபதியே
(முழுமுதலைக் காண வந்தேன்)
மலைக்குகையின் சுவற்றினிலே
செதுக்கியதோர் திருவுருவம்
வலம்புரியாய் தும்பிக்கை
வரங்கள் தரும் இரண்டு கரம்
அர்த்த பதுமத்தில் அமர்ந்து அருள்கின்ற
சித்தம் மேவிய சிவகுமரா
அத்தன் என்றுனை அண்டி வந்தவரை
அன்புடன் காக்கும் ஓங்காரா
(முழுமுதலைக் காண வந்தேன்)
No comments:
Post a Comment