Wednesday, September 17, 2014

Sudarsana - அக்கரத்தின் சக்கரத்தை அருந் தமிழில் பாட வந்தேன்

அக்கரத்தின் சக்கரத்தை அருந் தமிழில் பாட வந்தேன்
இக்கடலின் எல்லை தாண்ட உன்னுதவி நாடி வந்தேன்

(அக்கரத்தின் சக்கரத்தை)

சுதர்சனமுன் பெயரைச் சொல்ல செல்வ மெலாம் குவிந்து விடும்
நிதமும் உன்னை நாம் நினைக்க நம்வினைகள் அகன்று விடும்

அண்ட பேரண்டம் அங்கு நிற்பது
உனது சுழற்சியால் என்றறிவேன்
மீண்டு மிங்குநான் வந்தி டாதபடி
வரங்கள் கேட்டுநான் வந்திடுவேன்

(அக்கரத்தின் சக்கரத்தை)

திரிபுரத்தை சிவனெரிக்க சூலத்தின் முனையிருந்தாய்
அறியாமை எனுமிருளை அகற்றிடவும் நீ வருவாய்

ஆறு கல்யாண குணங்களைத் தன்
அகத்தில் அடக்கிய சுதர்சனமே
சீறி ஒளிர்கின்ற தீயின் ஜ்வாலைகள்
அழகு சேர்ப்பதொரு நிதர்சனமே

(அக்கரத்தின் சக்கரத்தை)





No comments:

Post a Comment