Thursday, September 18, 2014

General - தாயுமானவர்

உன்தமிழைப் படித்து வந்தேன் உன்னாலே தமிழ் அறிந்தேன்
குன்றாதத் தமிழின் சுவையில் கள்ளுண்ட வண்டு ஆனேன் (2)

(உன்தமிழைப் படித்து வந்தேன்)

மலர் அவிழ்த்த மணமாகி மனம் பரவும் உனது தமிழ்
இலக்கணங்கள் கற்றிடவே இது போலே ஏது தமிழ்

சைவ சமயமும் போற்றி வணங்கிடும்
தெய்வ புலவனே தமிழ்மகனே
தமிழின் அறிவோடு சிவனை கலந்திங்கு
அமுது போலூட்டும் திருவருளே

(உன்தமிழைப் படித்து வந்தேன்)

ஞானத்திலே ஊறியதோர் தேனடையோ உனது தமிழ்
சிவநெறியை ஊட்டிவிடும் கவிநெறியோ உனது தமிழ்

மதமும் கடந்திங்கு மனதில் அமர்ந்திட்ட
பதும நிதியாகும் உனது தமிழ்
தேடின் கிடைக்காத ஆடல் நாதனின்
பாதம் சேர்த்திடும் உனது தமிழ்

(உன்தமிழைப் படித்து வந்தேன்)


No comments:

Post a Comment