வியாழன் என்றாலே வருமொரு பாட்டு
ஸாயிதன் அழகிய திருமுகம் பார்த்து
நாதனின் நாமம் நாவினில் இனிக்கும்
பாதங்கள் கண்ட விழிகளும் பனிக்கும்
(வியாழன் என்றாலே...)
அவன் புகழ் பாடிடத் தமிழ்வந்து சேரும்
அவன் பெயர் சொல்லியே கவிதையும் கூடும்
கவலைகள் எல்லாம் கணத்தினில் தீரும்
உவகையும் வந்து இதயத்தில் மோதும்
(வியாழன் என்றாலே...)
அவனைப் பாடுதல் பிறவியின் பலனே
அவனும் பார்த்தால் எல்லாம் நலனே
நயனத்தில் அவனே நெஞ்சினுள் அவனே
நாரணன் அவனே அவனே சிவனே
(வியாழன் என்றாலே...)
விளக்கினில் நீரை விட்டவன் எரித்தான்
வந்தவர் கரங்களில் வரங்கள் நிறைத்தான்
கலங்கிட வேண்டாம் கும்பிடு வோமே
காத்தல் அவன்கடன் நம்பிடு வோமே
(வியாழன் என்றாலே...)
No comments:
Post a Comment