Monday, February 3, 2014

Murugan - மருதமலை முருகன் துதி

மருதமலை மீதுஎங்கள் முருகனவன் ஆட்சி
திரளுமொரு கூட்டமவன் திருவருளின் சாட்சி
திருவடிகள் பணிந்ததுமே தீவினையின் வீழ்ச்சி
தனக்குவொரு ஈடுஇல்லா திருக்குமரன் மாட்சி

திருமுருகா வா
திருவருள் தா தா

ஆறுபடை வீடுபோன்ற கோவில் ஒன்றிது  குன்று
தோறாடல் வரிசையிலே  வந்த குன்றிது (2)
ஏழுநூறு படிகள் கடந்து உலகினைக் காக்க - அந்த
அழகன் நின்று காட்சி தரும் அழகு குன்றிது

திருமுருகா வா உந்தன்
திருவருள் தா தா

மருதமலை மீதுஎங்கள் முருகனவன் ஆட்சி
திரளுமொரு கூட்டமவன் திருவருளின் சாட்சி

திருமுருகா வா
திருவருள் தா தா

உடற்பிணிகள் போக்கவிங்கு மூலிகை உண்டு - உள்ளக் 
கிடக்கைதனை தீர்க்கயிங்கு வேலன்கை உண்டு (2)
படமெடுத்து ஆடும்பாம்பு சித்தரும் உண்டு - தனது
பக்தருக்கு வரமருளும் சித்தமுமுண்டு

திருமுருகா வா உந்தன்
திருவருள் தா தா

மருதமலை மீதுஎங்கள் முருகனவன் ஆட்சி
திரளுமொரு கூட்டமவன் திருவருளின் சாட்சி
திருவடிகள் பணிந்ததுமே தீவினையின் வீழ்ச்சி
தனக்குவொரு ஈடுஇல்லா திருக்குமரன் மாட்சி

திருமுருகா வா
திருவருள் தா தா
திருமுருகா வா

திருவருள் தா தா

1 comment: