Sunday, February 2, 2014

Iyappan - பொருளொன்றும் தேவை இல்லை

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 
இருள்நீக்கி ஒளிதந்தாயே - இந்த
அருளொன்று போதும் ஐயப்பா 

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 

பிடிவாதம் தனைமாற்றி னாயே - உன்
பதினெட்டுப்  படியேற்றி னாயே
கடிவாளம் இட்டெந்தன்  மனதை - உன்
காவலிலே பூட்டி னாயே

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 

புயல்காற்று அடித்தாலும் என்ன இல்லை
பூமிபி ளந்தாலும் என்ன
நயனத்தை இமைகாப்ப தைப்போல் - என்னை
நீகாக்க வேணுமய் யப்பா

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 

5 comments: