பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா
இருள்நீக்கி ஒளிதந்தாயே - இந்த
அருளொன்று போதும் ஐயப்பா
பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா
பிடிவாதம் தனைமாற்றி னாயே - உன்
பதினெட்டுப் படியேற்றி னாயே
கடிவாளம் இட்டெந்தன் மனதை - உன்
காவலிலே பூட்டி னாயே
பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா
புயல்காற்று அடித்தாலும் என்ன – இல்லை
பூமிபி ளந்தாலும் என்ன
நயனத்தை இமைகாப்ப தைப்போல் - என்னை
நீகாக்க வேணுமய் யப்பா
பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா
Nice song. Thanks
ReplyDeleteThank you bala
ReplyDeleteகடிவாளம் இட்டெந்தன் மனதை - உன்
ReplyDeleteகாவலிலே பூட்டி னாயே// இதுதான் எல்லோருக்கும் உண்மை.
thank you kothai akka
ReplyDeletevery nice
ReplyDelete