தெளிந்தவுறுதி
நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு
பயந்தபடகு ஆழிகடந்த தில்லை
சிற்றெறும்பு உணவுசுமந்து
சுவற்றிலேறும் போதிலே
சற்றுதளர்ந்து
சறுக்கினாலும் சோர்ந்துபோவ தில்லை
வெற்றிக்கனி
பறித்திட்ட மாமனிதர் இதைபோல
விடாமுயற்
சியினாலே வென்றகதை பலவுண்டு.
தெளிந்தவுறுதி
நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு
பயந்தபடகு ஆழிகடந்த தில்லை
ஆழ்கடலுள் முத்தெடுக்க
செல்லுகின்ற மனிதனுக்கு
எடுத்தவுடன்
கிடைக்குமென்று உறுதிகூற முடியாது
மீண்டும்மீண்டும்
கடலினுளே முயன்று மூழ்கினால்தான்
முத்தெடுப்பான்
இதுவேநம் வாழ்விற்கும் பாடமாம்
தெளிந்தவுறுதி
நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு
பயந்தபடகு ஆழிகடந்த தில்லை
தோல்வியொரு
கேள்வியாகும் கேள்வியின் விடைதேடு
தோல்வியொரு
பாடமாகும் பாடத்தைநீ படித்துப் பாரு
தோல்வியின்
பாரத்திலே சோர்ந்துபோகக்
கூடாது
திருக்குறளும்
இதைச்சொல்லும் முயற்சித்திரு வினையாக்கும்
தெளிந்தவுறுதி
நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு பயந்தபடகு
ஆழிகடந்த தில்லை
No comments:
Post a Comment