மயிலையில் ஒளிர்கின்ற ஜோதி - இந்த
மண்ணுலகைப் படைத்திட்ட ஆதி
தயங்காது கலங்காது வாரும் - அவள்
தர்பாரில் கிடைக்கும் நல்நீதி
(மயிலையில் ஒளிர்கின்ற..)
வெறுங்கையுடன் அடியார்கள் வருவார் - அவள்
வரமெல்லாம் அள்ளியேத் தருவாள்
பரிவோடு நமைகாத்து அருளும் - அவளின்
பரிபாலனம் போலெங்கும் இல்லை
(மயிலையில் ஒளிர்கின்ற..)
தந்தைதாய் அவளாகி நிற்பாள் - நமது
தேவைகள் அவள்தீர்த்து வைப்பாள்
அந்தகாரத்தில் ஒரு ஒளியாய் - நமது
இதயத்தில் அவளென்றும் ஒளிர்வாள்
(மயிலையில் ஒளிர்கின்ற..)
பாராதி அண்டங்கள் படைத்தாள் - அந்தப்
பிரணவத்தின் வடிவாகிச் சிரித்தாள்
வாராது வந்தமா மணியாய் - நமது
வாழ்வினிலே என்றென்றும் இருப்பாள்
(மயிலையில் ஒளிர்கின்ற..)
Venkatesh Radhakrishnan Iyer
No comments:
Post a Comment