மதங்கள் நூறு உலகில் அந்த
மதத்தில் நூறு குருமார்
இதயம் தொட்டுச் சொல்மின் அதில்
இவன்போல் யாரு கிடைப்பார்
(மதங்கள் நூறு...)
இவனது கோவில் தரிசனம் செய்ய
இன்பம் நம்மைத் தொடரும்
கவலை தீரும் குழப்பம் தீரும்
கருத்தில் தெளிவு பிறக்கும்
துனியும் உதியும் தர்மத்தின் வழியில்
சேர்க்கும் இரண்டு வரங்கள்
இனியும் பயமேன் நமது சிரம்மேல்
இவனின் அன்புக் கரங்கள்
(மதங்கள் நூறு...)
தேனால் பாலால் பொன்னால் பொருளால்
செய்வது இல்லை பூசை
ஏழையின் பசிக்கு அன்னம் தந்தால்
அதுவே ஸாயியின் ஆசை
பதினொரு கட்டளை நமக்கென தந்தான்
பாதை அவனே சொல்வான்
எதுவும் அவனது பொறுப்பில் விட்டால்
அவனே பார்த்துக் கொள்வான்
(மதங்கள் நூறு...)
வீயார்
No comments:
Post a Comment