மண்ணெல்லாம் சீரடியின் மண்ணாகுமா
மொழியெல்லாம் பாபாவின் மொழியாகுமா
கண்ணவனைப் பாராமல் கண்ணாகுமா
கவியவனைப் புகழாமல் கவியாகுமா
சீரடியாம் தலத்தினிலே ஒர் சூர்யோதயம்
ஸாயியினால் ஆனதுபக்தி பூங்காவனம்
வாருங்கள் மனதைசெய்து நிர்மாலியம்
சேவித்தால் வரங்களுண்டு நூறாயிரம்
துனியைக் கண்டு துயரம்தீர்ந்த காட்சியுண்டு
உதியாலே விதியை வென்ற சாட்சியுண்டு
இனியுமொரு துன்பமில்லை என்று மகிழ்வோம்
இவனேநம் தாயுமானான் என்று நெகிழ்வோம்
No comments:
Post a Comment