Friday, November 25, 2016

சாமி பாட்டு எழுத நினைச்சா

சாமி பாட்டு எழுத நினைச்சா சந்தம் வரல
சுருதிப் பாட்டு எழுத நினைச்சா சுருதி சேரல
ஓடிப்போன பத்துநாளா மாடா ஒழச்சதால்
ஒடுங்கிப் போயி படுத்தாலுமே தூக்கம் வரல

வொய்ஃபு காப்பி கப்போட எதிருல நின்னா
ஆதார் கார்டு எங்கேன்னு கேக்கத் தோணுது
நெய்பர் சிரிச்சு ஹலோன்னு வந்து சொன்னாக்கா
நூறு ரூவாய் கேப்பாரோன்னு நெஞ்சு பதறுது

இந்து சிதறும் Ad பேப்பர் நோட்டாத் தெரியுது
எங்க பாரு சில்லறைக்காய் ஆளு அலையுது
இந்தத் திட்டம் நல்லதான்னு சொல்லத் தெரியல
இந்த மாசம் செலவுகம்மி அதான்  தெரியுது

No comments:

Post a Comment